Categories: உலகம்

ஆஹா ..இதுதான் க்யூட்!! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் சிறிய தம்பதியினர் ..!

Published by
அகில் R

பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக குறுகிய தம்பதியினர் என்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இவர்கள் உலக கின்னஸ் புத்தகத்திலும் அங்கீகரிக்கபட்டுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்கள் உறவை மேம்பபடுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான பிணைப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த 15 வருடங்களில் சமூக அழுத்தங்களுக்கு அடி பணிவதற்கு பதிலாக, இந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டும், தங்கள் தனித்துவமான உடல் பண்புகளை ஏற்றுக்கொண்டும், நீடித்த ஒரு கூட்டாண்மையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, இந்த ஜோடியின் ஒட்டு மொத்த உயரம் 181.41 செ.மீ ஆகும். பாலோவின் உயரம் 90.28 செ.மீ மற்றும் கட்யூசியாவின் உயரம் 91.13 செ மீ ஆகும். இவர்களின் இந்த கின்னஸ் உலக சாதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை படைத்த இந்த தம்பதியினர் இது குறித்து பேசிய போது, “நாங்கள் உருவத்தில் குறுகியவர்களாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பெரிய இதயங்கள் மற்றும் எங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொருவரிடமும் நிறைய அன்பு உள்ளது.

எங்கள் வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் இந்த சவால்களை ஒன்றாக சமாளிக்க போகிறோம் என்பதை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறியுள்ளனர். தற்போது முறையே 31 மற்றும் 28 வயதான இந்த தம்பதியினர் ஆவணப்படுத்தப்பட்ட மிகக் குறுகிய திருமணமான ஜோடி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
அகில் R

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

10 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

46 minutes ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago