Categories: உலகம்

24 வருடத்தில் இது புதிய மாற்றம் ! பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து தூக்கிய விளாடிமிர் புடின் !!

Published by
அகில் R

Vladimir Putin : ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி உள்ளார்.

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் தற்போது பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையிலான போர் நடைபெற்று கொண்டே வருகிறது. மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி கொண்டே வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி புடின், ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்ஜி ஷோய்குவை பதவி நீக்கம் செய்து அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு அமைச்சராக 65 வயது நிரம்பிய ஆண்ட்ரி பெலோசோவை பணியமர்த்தியுள்ளார். இவர் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிக்க அனுபவம் வாய்ந்தவர் ஆவார். மேலும், பதிவியிலிருந்து நீக்கிய செர்ஜி ஷோய்குவை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக (Secretary Of National Security Council) ஜனாதிபதியான புடின் நியமித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதிபர் விளாடிமிர் புடின் மேற்கொண்ட மிக முக்கியமான இராணுவ மறு சீரமைப்பாக இது தான் பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் செர்ஜி ஷோய்குவும், அதிபர் புடினும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 5-வது முறையாக மீண்டும் ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் அதிபராக இருந்து வரும் புடின் இராணுவ மறு சீரமைப்பாக எடுத்த முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

Published by
அகில் R

Recent Posts

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…

6 minutes ago

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

19 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

12 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

13 hours ago