Categories: உலகம்

பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை சாடிய உக்ரைன் அதிபர்.! ஜனநாயகமும்.. குற்றவாளியும்..

Published by
மணிகண்டன்

உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை அவ்வபோது நிகழ்த்தி வருகிறது. நேற்று கூட, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட முக்கிய 5 நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ந்த தாக்குதலால் மட்டுமே 3 குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர்.  கீவ் நகர் உட்பட டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்ளிட்ட நகரங்களின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனில் தாக்குதல் நடந்த நேற்றைய தினம் தான் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். 22வது இந்தியா – ரஷ்யா மாநாட்டில் கலந்துகொண்டு இரு நாட்டு உறவை பலப்படுத்தும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை நிகழ்த்தினார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன், இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ள நிகழ்வை மறைமுகமாக குறிப்பிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சனம் செய்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிடுகையில், ” ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக உக்ரைனில் இன்று, 37 பேர் கொல்லப்பட்டனர். 170 பேர் காயமடைந்தனர்.

உலகின் மிகப்பெரிய தலைவரின் சந்திப்பின் போது இப்படியான நிகழ்வு பெரும் ஏமாற்மே. அமைதியின் முயற்சிகளுக்கு இந்த தாக்குதல்கள் பேரழிவை தரும். உலகின் மிக இரத்தக்களரி குற்றவாளியை (ரஷ்ய அதிபர் புதின்) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலகின் மிக பெரிய ஜனநாயக தலைவர் (பிரதமர் மோடி) நேற்று தாக்குதல் நடைபெற்ற நாளில் சந்திப்பு நடைபெறுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

1 hour ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

1 hour ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

2 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

4 hours ago