Categories: உலகம்

இஸ்ரேலை தாக்க தயார் நிலையில் ஈரான்.. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

Joe Biden: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.

இதில் இஸ்ரேல் அண்டை நாடான ஈரான் தலையிடும் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த பதற்றமான சூழலில் கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கு கெடு வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராக இருக்கிறது.

தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், ட்ரான்களுடன் இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் படை தயாராக உள்ளது. இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இருப்பினும் இது உறுதியான தகவல் இல்லை என்பது போன்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இஸ்ரேலை தாக்க வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

5 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

8 hours ago