Categories: உலகம்

பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை.! எஸ்.ஜெய்சங்கர்

Published by
செந்தில்குமார்

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே நிலவி வரும் கருத்து மோதல்களினால் இரு நாடுகளுக்கு இடையான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய காரணமாக காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் னும் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இதனால் இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. தொடர்ந்து கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் கனடாவில் இருந்து யாரும் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்பொழுது, இந்திய தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், கனடாவில் நடந்து வரும் சூழ்நிலையை சாதாரணமாக கருதக்கூடாது என்றும், பேச்சு சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு மற்றவர்களிடமிருந்து பாடங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் இதைப்பற்றி மக்களுக்குச் சொல்லலாம். பேச்சுச் சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை. அது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும், சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல.” என்று கூறினார்.

மேலும், கனடா இடையேயான சிக்கலை பற்றி பேசுகையில், ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, “மற்ற நாடுகள் இந்தியாவின் நிலையில் இருந்தால், அவர்களின் இராஜதந்திரிகள், தூதரகங்கள் மற்றும் குடிமக்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் எப்படி நடந்துகொள்வார்கள்.?” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம், காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் குழு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகத்திற்கு தீ வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

16 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

17 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

18 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

18 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

20 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

21 hours ago