Categories: உலகம்

பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை.! எஸ்.ஜெய்சங்கர்

Published by
செந்தில்குமார்

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே நிலவி வரும் கருத்து மோதல்களினால் இரு நாடுகளுக்கு இடையான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய காரணமாக காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் னும் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இதனால் இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. தொடர்ந்து கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் கனடாவில் இருந்து யாரும் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்பொழுது, இந்திய தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், கனடாவில் நடந்து வரும் சூழ்நிலையை சாதாரணமாக கருதக்கூடாது என்றும், பேச்சு சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு மற்றவர்களிடமிருந்து பாடங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் இதைப்பற்றி மக்களுக்குச் சொல்லலாம். பேச்சுச் சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை. அது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும், சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல.” என்று கூறினார்.

மேலும், கனடா இடையேயான சிக்கலை பற்றி பேசுகையில், ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, “மற்ற நாடுகள் இந்தியாவின் நிலையில் இருந்தால், அவர்களின் இராஜதந்திரிகள், தூதரகங்கள் மற்றும் குடிமக்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் எப்படி நடந்துகொள்வார்கள்.?” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம், காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் குழு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகத்திற்கு தீ வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

15 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

16 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago