இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
ஈரான் கொத்து குண்டுகளை வீசியுள்ளது, 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், முதல் முறையாக இத்தகைய கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது.

ஈரான் : இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஈரானே அதிக சேதங்களை சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 639 பேர் பலியான நிலையில், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரத்தில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இஸ்ரேலில் குடியிருப்பு பகுதிகளில், ஏவுகணைகளுக்குள் சிறிய ரக குண்டுகளை வைத்து ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த குண்டுகள் மிகவும் ஆபத்தானவை, அவை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்து. கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது இஸ்ரேலிய இராணுவத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (ஜூன் 19) ஈரான் ஏவிய குறைந்தபட்சம் ஒரு ஏவுகணையில் கிளஸ்டர் குண்டு போர்முனை இருந்ததாக ஐ.டி.எஃப் தகவல் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கிளஸ்டர் குண்டு என்றால் என்ன?
ஒரு கிளஸ்டர் குண்டு என்பது ஒரு பெரிய பகுதியில் பல சிறிய குண்டுகளை வீச வடிவமைக்கப்பட்ட ஒரு ஆயுதமாகும். அதன் இலக்கை நேரடியாக வெடிப்பதற்கு பதிலாக, ஒருஏவுகணை நடுவானில் திறந்து, அந்தப் பகுதி முழுவதும் சிறிய குண்டுகளை வீசப்படுகிறது. இந்த குண்டுகள் கீழே விழும்போது இலக்கை அடைந்ததும் வெடிக்கும். கிளஸ்டர் குண்டுகளின் ஏவுகணை பெரும்பாலும் அதிக உயரத்தில் வெடிக்கப்படுகின்றன, இதனால் அதிலிருந்து வெளியாகும் குண்டுகள் ஒரு பெரிய பகுதியில் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இஸ்ரேல் ராணுவம் கூறியது என்ன?
இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, ஈரான் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் தரையில் இருந்து ஏழு கிலோமீட்டர் உயரத்தில் வெடித்தன. இதன் காரணமாக, சுமார் 20 சிறிய குண்டுகள் இஸ்ரேலின் எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் விழுந்தன. இதன் பின்னர், இஸ்ரேலிய இராணுவம் சாதாரண குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, எந்தப் பொருளையும் தொடாதீர்கள் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கிளஸ்டர் குண்டுகளுக்கு தடை
2008 ஆம் ஆண்டு கொத்து வெடிமருந்துகளை தடை செய்வது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், 123 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் 2010 இல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை. மார்ச் மாத தொடக்கத்தில், ரஷ்யா உக்ரைனின் கிழக்குப் பகுதியான டோப்ரோபிலியாவை கொத்து குண்டுகளால் தாக்கியது. இதில் நகரின் மையப் பகுதி குறிவைக்கப்பட்டு 11 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025