Categories: உலகம்

தண்ணீர் தெளித்து பிராங்க் செய்த இளைஞர்கள்..! ரயிலை நிறுத்தி அடி வெளுத்த பயணிகள்!

Published by
பால முருகன்

பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும். அதற்கு உதாரணமாக தான் இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே உள்ள ஏரியில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார்கள்.

அப்போது அந்த நேரத்தில் ரயில் அந்த பகுதியில் வந்ததை கவனித்த இளைஞர்கள் ரயிலில் இருப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடலாம் என மோசமான சம்பவத்தில் ஈடுபட்டனர். ரயில் வந்த பிறகு தன்னுடைய பைக்கில் ஆக்ஸிலேட்டரை திருக்கி ரயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்கள்.

இதனை அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகவும் பதிவு செய்தார். ஓட்டும் ரயில் எங்கே நிற்க போகிறது என விளையாட்டாக அந்த இளைஞர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டிருந்த சூழலில், திடீரென ரயில் நின்றது . நின்றவுடன் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

பிறகு ரயிலில் இருந்து கீழே இறங்கிய சிலர் இளைஞர்களை தாக்கி இது என்ன செயல் என்பது போல கூறி தாக்கினார்கள். இதனை பார்த்த இளைஞர்கள் தெறித்து ஓடினார்கள். பிறகு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த அந்த பைக்கையும் ரயிலில் ஏற்றினார்கள். ரயிலும் அதன் பிறகு கிளம்பியது. பைக் போன கோபத்தில் கீழே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கற்களை கொண்டு ரயில் பெட்டிகள் மீதும் வீசினார்கள்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், சம்பவம் இவ்வளவு தீவிரமாக  இருந்தபோதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இளைஞர்களின் பொறுப்பற்ற நடத்தைக்காக ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

11 minutes ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

31 minutes ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

1 hour ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

2 hours ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

2 hours ago

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

3 hours ago