உலகம்

ஜுக்கர்பெர்க் நவீன கால புரூஸ் லீ! அவர் தான் வெற்றிபெறுவார்.! அந்தர் பல்டி அடித்த மஸ்க்!

Published by
செந்தில்குமார்

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவருக்கிடையே தொழில்முறை போட்டியானது இருந்து வருகிறது. அதே போல, இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் தான் பேசியதை எலான் மஸ்க், எக்ஸ் கணக்கில் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரலாற்றாசிரியர் வால்டர் ஐசக்சனிடமும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், “அடுத்த வாரம் உங்கள் வீட்டில் பயிற்சி செய்வோமா?” என்று ஜுக்கர்பெர்க்கிடம் கேட்கிறார்.

அதற்கு கோவமான ஜுக்கர்பெர்க், “நீங்கள் உண்மையான எம்எம்ஏ சண்டையைச் செய்ய விரும்பினால், நீங்கள் சொந்தமாகப் பயிற்சி செய்து, நீங்கள் எப்போது போட்டியிடத் தயாராக உள்ளீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், “ஒருபோதும் நடக்காத ஒன்றை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை, எனவே நீங்கள் இதைச் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்து விட்டால் விரைவில் அதைச் செய்ய வேண்டும் ” என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “திங்கட்கிழமை நான் பாலோ ஆல்டோவில் இருப்பேன். அங்கு நாம் சண்டையிடுவோம். இன்று லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் ஒரு சிறிய போட்டியைத் தவிர, நான் அதிகம் பயிற்சி செய்யவில்லை. எங்கள் அளவு வித்தியாசத்தைப் பொறுத்தவரை, இது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “நீங்கள் ஒரு நவீன கால புரூஸ் லீ, அதனால் எப்படியாவது வெற்றி பெறுவீர்கள்” என்றும் மஸ்க் தெரிவித்தார். இதற்கு முன்னதாக, எங்கள் இருவருக்கு இடையான போட்டி இத்தாலியில் நடைபெறும் என்றும் சண்டைபோடும் காட்சிகள் எக்ஸ் மற்றும் மெட்டாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

5 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

5 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

6 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

6 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

7 hours ago