Madurai High Court [Image source : The Hindu ]
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர், கச்சத்தீவை மீட்பது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியா சுதந்திரமடைந்த பின், கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையில், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மீனவர்களுக்கு இடையூறு அளிக்கப்படுவதாகவும், இலங்கையில் கைதான 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட உடன்படிக்கையை ரத்துசெய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக மீனவர்களை மீட்பதற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்து நீதிபதிகள், கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என, கச்சத்தீவு தொடர்பான வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…