மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி அரசாணை..!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆகவும், 6-8ஆம் வகுப்பு வரை ரூ.3000ல் இருந்து 6000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், 9-12ஆம் வகுப்பு வரை ரூ.4,000ல் இருந்து ரூ.8000 ஆகவும், இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும், முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7,000ல் இருந்து 14,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.