அரசியல்

தக்காளியை ரேஷன் கடைகளில் விற்பது பெருமையா..? – செல்லூர் ராஜு

Published by
லீனா

திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை என செல்லூர் ராஜு விமர்சனம். 

சமீப நாட்களாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், தமிழகத்தில் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், தக்காளி விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.

அதன்படி, நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது. நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்களுக்கு நடமாடும் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்வது தான் சிறப்பாக இருக்கும். அதைவிட்டு விட்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வதை திமுக அரசுபெருமையாக கருதுகிறது. திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

17 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

44 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

4 hours ago