ADMK Ex minister Sellur raju [Image source : Twitter/@SellurRajuOffl]
திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை என செல்லூர் ராஜு விமர்சனம்.
சமீப நாட்களாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், தமிழகத்தில் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், தக்காளி விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.
அதன்படி, நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது. நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்களுக்கு நடமாடும் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்வது தான் சிறப்பாக இருக்கும். அதைவிட்டு விட்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வதை திமுக அரசுபெருமையாக கருதுகிறது. திமுக அரசுக்கு அடிப்படை நோக்கமே தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…