அரசியல்

இது கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

பொது சிவில் சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும் என முதல்வர் ட்வீட். 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிடக்கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர், ரிதுராஜ் அவஸ்தி அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வர் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் தனித்துவமான மத, பண்பாட்டு அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரே மாதிரியான பெரும்பான்மைச் சமூகத்தை அமைப்பதற்கான முயற்சியாகவே அமையும்.

இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும். நம் நாட்டின் வரலாற்றுப் பின்னணி எதையும் கருத்தில் கொள்ளாமல் UCC செயல்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர முயல்வதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்! இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் வலிமை! வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, சமூக நல்லிணக்கம் காப்போம்!’ என பதிவிட்டுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

7 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

8 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

9 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

9 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

13 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

13 hours ago