அரசியல்

பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்த கனிமொழி எம்.பி…!

Published by
லீனா

பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி 

நேற்று 2023 -2024 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு மதிப்பெண் தரவரிசை  வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

இந்தாண்டு 1,87,847 ஆயிரம் பேருக்கு ரேங்க் பட்டியலிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். இந்தாண்டு 5,842 மாணவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

200க்கு 200 மதிப்பெண் பெற்று 102 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில கல்வி பயின்றவர்கள். இந்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா எனும் பெண் முதலிடமும், தர்மபூரியை சேர்ந்த ஹரினிகா எனும் பெண் இரண்டாமிடமும், திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ரா அவர்களுக்கு வாழ்த்துகள். கல்வியின் துணையோடு, மாநில அளவில் சாதித்திருக்கும் மாணவியின் கனவுகள் மெய்ப்படட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

46 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

1 hour ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

14 hours ago