அரசியல்

‘Love you தாத்தா’ – தனக்கு கடிதம் எழுதிய 3-ஆம் வகுப்பு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்த முதல்வர்…!

Published by
லீனா

இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் விதர்சன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த  கடிதத்தில், சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை நேரில் காண விரும்புவதாக  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாணவனின் இந்த ஆசையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைத்துள்ளார். தந்திர தின விழாவை காண்பதற்காக மாணவர் விதர்சன் சென்னை அழைத்து வரப்பட்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்று முதலமைசர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்வை நேரில் பார்வையிட்டார்.

இதுகுறித்து விதர்சனின் தாயார் அமுதவல்லி அவர்கள் கூறுகையில், எனது மகனின் ஆசையின்படி எங்களை சென்னை அழைத்து தங்க வைத்து கொடியேற்றும் நிகழ்வை நேரில் காணச் செய்த முதல்வர் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதே போல் மாணவன் விதர்சன், என் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி, ‘Love you தாத்தா’  என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 minutes ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

41 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago