Minister Ma Subramanian [File Image]
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அகில இந்திய அளவில் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டத்தில் தமிழகத்தில் 2018-க்கு பிறகு 86.50 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைக்க அக்டொபரில் 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு 60% மாநில அரசு 40% நிதி வழங்குகிறது. 1829 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2008-ல் இருந்து 1726 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 6,327 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 313 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், 1640 உறுப்புகள் அவர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டது.
தமிழகம் மருத்துவ கட்டமைப்பில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமான மாநிலமாக இருக்கிறது. குழந்தையின் பாலினம் கண்டுபிடித்து கூறப்படுவது தெரியவந்தால், நிச்சயமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…