அரசியல்

நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Published by
லீனா

தமிழ்நாட்டில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம். 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ அவர்கள், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களை கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார். தற்போது நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. அமணிப்பூரில், கலவரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் மோடிக்கு அதுபற்றிய நினைவு வந்திருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் போவதாக சொல்கிறார்கள். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  அண்ணாமலை வெளியிடும் தி.மு.க. பைல்கள் எல்லாமே பெயில் ஆகும். தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது; வீட்டில் இருப்பவர்களே அவருக்கு ஓட்டு போடுவார்களா என தெரியவில்லை; வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருப்பதால், அவரே அவருக்கு ஓட்டு போட மாட்டார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இதுதான் உதாரணம்; இந்த கட்சிகளை எல்லாம் அழைத்து வைத்து கூட்டணி என சொல்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

32 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago