Chennai High Court [Image source : Wikipedia]
கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3-வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈபிஎஸ் தரப்பில், ‘ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு வரும் வரை என்ன நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து வருகிறோம். கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிஎஸ் கட்சியின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு முடிவு என்பது அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…