selvaperunthagai [Imagesource : Thehindu]
எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவதை தடுக்க பாசிச பாஜக அரசு திட்டம் என செல்வப்பெருந்தகை அறிக்கை.
குஜராத் உயர்நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து விமர்சித்ததாக சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்தியாவில் இருக்கும் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தி விடலாம் என்று ஆளும் பாசிச பா.ஜ.க. அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. அன்புத்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்கள், மோடி அரசாங்கத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டு கடுமையான குரலில் கேள்வி கேட்கிறார்.
எந்த சக்தியாலும் அவரை மௌனமாக்க முடியாது. விசாரணை அமைப்புகளை வைத்து அன்புத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை அச்சுறுத்தி விடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது. எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவதை தடுக்க பாசிச பாஜக அரசு திட்டம். தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம்.
நீதித்துறை மீது முழு நம்பிக்கையிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தலைவர் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த போராட்டத்தில் தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் அன்புத்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…