karunagarajan [Imagesource : ABPnadu]
அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை என கருநகராஜன் பேட்டி.
சென்னையில் கருநகராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலைக்கு எதிரான அதிமுகவின் கண்டன தீர்மானத்தை எதிர்க்கிறோம். சி.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை; சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் மனம்போன போக்கில் பேசுகின்றனர்.
மாநிலத்தலைவர் அண்ணாமலையில் கருத்தும், தமிழ்நாடு பாஜகவின் கருத்தும் வேறு வேறு இல்லை; ஜெயலலிதாவுக்கு என்றும் நாங்கள் மரியாதை கொடுப்போம். அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை. அண்ணாமலை பொம்மை தலைவர் அல்ல, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்.
அண்ணாமலையை பொம்மையென செல்லூர் ராஜு கூறியது தான் கோமாளித்தனமாக உள்ளது. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜக தான் உதவியது. அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மாபெரும் மரியாதை உள்ளது. அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பொறாமை உள்ளது. அதனால் தான் அண்ணாமலையை இவ்வாறு பேசுகின்றனர்.
யார் யாருக்கு சுமை, யார் யாரை சுமந்தனர் என்பது மக்களுக்கு தெரியும். கூட்டணியை தீர்மானிக்க இன்னும் காலம் உள்ளது. கூட்டணியை முடிவு செய்வது பாஜக தலைமை. கூட்டணி என்பது பொதுவான ஒன்று. கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதிமுகவின் இந்த செயல் திமுகவுக்கு வாய்ப்பளித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…