Mnister V SenthilBalaji [Image source : TFIPOST]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது தான் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.
நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அவர்களை பார்ப்பதற்காக காரை விமான நிலைய வாயில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இது குறித்து பாஜக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது தான். ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…