அரசியல்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு..!

Published by
லீனா

மகளிர் மீதான ஆண் ஆதிக்க சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி என ஆசிரியர் கீ.வீரமணி கருத்து. 

வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர்சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை  உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, இல்லத்தரசிகள் பணியை கணவனின் பணியோடு ஒப்பிட முடியாது. இல்லத்தரசிகளின் பணி 24 மணி நேர பணி கணவரது பணி 8 மணிநேரம் மட்டும் தான். குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கின்றனர். மனைவி குடும்பத்தை கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி, கணவர் சம்பாதிக்கிறார் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் சம்பாத்தியமே’ என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு; மகளிர் மீதான ஆண் ஆதிக்க சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

இப்படிப்பட்ட சம உரிமை சிந்தனை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அவ்வப்போது முற்போக்குச் சிந்தனை கொண்ட நீதிபதிகள் மூலம் வெளியாவது நாட்டின் வருங்காலம் பற்றிய நம் கவலையைப் போக்குவதாக உள்ளது; நம்பிக்கை தருவதாக உள்ளது. முற்போக்குத் தீர்ப்புச் சொன்னவர் நீதிபதி ராமசாமி; அன்று பெரியார் ராமசாமி, இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி! எவ்வளவு எதிர்பாராத யதார்த்தப் பொருத்தம்!’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

15 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

16 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago