அறிவியல்

#Chandrayaan3: நிலவில் என்ன வேலை செய்ய போகிறது லேண்டர் மற்றும் ரோவர்..? முழுவிவரம் இதோ..!

Published by
செந்தில்குமார்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.

லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த லேண்டரில் ஆனது 4 பகுதிகள் உள்ளன. 26 கிலோ எடை கொண்ட ரோவரில் 2 பகுதிகள் உள்ளன.

நிலவில் லேண்டரின் வேலை என்ன.?

ரம்பா-எல்பி (RAMBHA – LP): 

இந்த ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர்-லாங்முயர் ஆய்வு (ரம்பா-எல்பி) பகுதியானது, அணுக்களில் இருக்கும் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் மாற்றங்களையும், அருகிலுள்ள மேற்பரப்பு பிளாஸ்மாவில் உள்ள அடர்த்தி மற்றும் காலப்போக்கில் அதன் மாற்றங்களையும் நேரத்தை பொறுத்து அளவிடுகிறது.

சேஸ்ட் (ChaSTE):

சந்திரராஸ் சர்பேஸ் தெர்மோ பிஸிக்கல் எக்ஸ்பெரிமெண்ட் (சேஸ்ட்) அமைப்பானது, துருவப் பகுதிக்கு அருகில் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள், வெப்பப் பண்புகளின் அளவீடுகளை மேற்கொள்ள உதவுகிறது.

இல்சா (ILSA):

சந்திர நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவியானது, நிலவில் தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள், நில விரிசல்கள், மேடுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து கட்டமைப்பை வரையறுப்பதற்கும், அதனை அளவீடுகளை மேற்கொள்ளும்.

எல்ஆர்ஏ (LRA):

லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே (எல்ஆர்ஏ) என்பது லேசர் ஒளியைப் பயன்படுத்தி, லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக தீர்மானிக்கவும் மற்றும் அதற்கான தூரத்தை துல்லியமாக கணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது லேசர்களைப் பயன்படுத்தி சந்திர மேற்பரப்பில் சோதனைகளைச் செய்யும். சந்திரன் அமைப்பின் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அமைப்பும் ஆகும்.

நிலவின் மண் மற்றும் பாறையை ஆய்வு செய்யும் ரோவர்:

லேசர் இண்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS):

ரோவரில் இருக்கும் லேசர் இண்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் அமைப்பு, தரம் மற்றும் அளவு அடிப்படை பகுப்பாய்வு, நிலவின் மேற்பரப்பில் இருக்கும் வேதி கலவைகள் அவை உருவாவதற்கானற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யும். நிலவு மேற்பரப்பு பற்றிய நமது புரிதலை மேலும் மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS):

இந்த அமைப்பானது ஆல்பா துகள்கள் மற்றும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தி நிலவில் தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள, மண் மற்றும் பாறைகளில் அடிப்படை கலவைகளை, அதாவது மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு உள்ளிட்டவற்றின் மூலக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

நிலவில் சந்திராயன்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியதும், நிலவை அடைந்துவிட்டதாக தகவலை பூமிக்கு அனுப்பும். பிறகு ரோவர் தனது எஞ்சின்களை இயக்கி, லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் கால் பதிக்கும். இதனையடுத்து, ரோவரில் இருக்கும் கேமரா லேண்டரையும், லேண்டரில் இருக்கும் கேமரா ரோவரையும் புகைப்படம் எடுத்து, பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்த புகைப்படத்தைக் காண உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

26 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

31 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

54 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago