ISRO PSLV-C56 [ ZEE News ]
சிங்கப்பூரின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக்கோள் ,10 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மூன்று நானோ செயற்கைக்கோள்கள் உட்பட ஆறு இணை செயற்கைக்கோள்கள் இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ST இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) உருவாக்கிய SAR பேலோடைக் கொண்டுள்ளது, இது அனைத்து வானிலை பற்றிய தகவல்களை துல்லியமாக 1m-தெளிவுத்திறனில்(resolution) படங்களை வெளியிடும் திறன் கொண்டது.
PSLV-C56 சரியான சுற்றுப்பாதையில் DS-SAR மற்றும் 6 இணை செயற்கைக்கோள்கள் உட்பட ஏழு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது ” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…