ISRO PSLV-C56 [ ZEE News ]
சிங்கப்பூரின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக்கோள் ,10 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மூன்று நானோ செயற்கைக்கோள்கள் உட்பட ஆறு இணை செயற்கைக்கோள்கள் இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ST இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) உருவாக்கிய SAR பேலோடைக் கொண்டுள்ளது, இது அனைத்து வானிலை பற்றிய தகவல்களை துல்லியமாக 1m-தெளிவுத்திறனில்(resolution) படங்களை வெளியிடும் திறன் கொண்டது.
PSLV-C56 சரியான சுற்றுப்பாதையில் DS-SAR மற்றும் 6 இணை செயற்கைக்கோள்கள் உட்பட ஏழு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது ” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…