இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கூறியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் இருந்து கேரளாவில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஐந்து நாட்கள் தாமதமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தேதியில் மழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த […]
வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப்போய், புயல் கரையை கடக்கும் போது, இங்குள்ள ஈரப்பத காற்றையும் ஈர்த்துவிட்டு சென்றதால் இங்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அனல்காற்று வீசி, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் […]
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வாங்க கடலில் வரும் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து 29-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் உருவாகும் தினத்தில் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், இன்று தமிழகத்தில் சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தொடங்கி 24-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு உல் தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்தமிழகத்தில் இயல்பாய் விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள்தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் திசையில் மாறுபாடு காணப்படுவதால், தமிழகம மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையம் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யவில்லை என்றும் வறண்ட வானிலையே காணப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் 25ம் தேதிவரை தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒருமணி […]
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கனமழை நாளைவரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் […]
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்றும் , நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று வரை, 422 புள்ளி 3 […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்துள்ளது. இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை […]
தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
பெய்ட்டி புயல் இன்று காக்கிநாடா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்த்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது 23 கீ.மீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்கிறது. இந்த புயல் இன்று மாலை வலுவிழந்து காக்கிநாடா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
ஆந்திராவை நோக்கி நகரும் பெய்ட்டி புயல், வட தமிழகத்திற்கு மழையைக் கொடுக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே திங்கள் கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளார். பெய்ட்டி புயலால் முதலில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மழைக்கு […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார். புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – […]
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுவதாகவும், இது தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே ஆயிரத்து […]