தனது திறமை மூலம் வறுமையை உடைத்தெறிந்த இளம் வீரர்.! பானிபூரி கடை டூ ஐபிஎல் ஏலம் 2.4 கோடி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் புகழ் பெற்ற சச்சின் டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டு வந்தார்.
  • ஐபிஎல் ஏலத்தில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ரூ.2 கோடியே 40 லட்சதுக்கு ஏலமெடுத்தது. பிறந்ததிலிருந்து வறுமை மட்டுமே அறிந்திருந்த இவர், தற்போது அவரது கையில் கோடிகளில் ஆரம்பித்துள்ளது.

ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால். இவர் சிறுவயதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மும்பைக்கு வந்தபின், வசிக்க வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். அங்கு ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை கண்டு ஏக்கம் அடைந்த இவர், புகழ் பெற்ற சச்சின் டெண்டுல்கர் போல் ஆக வேண்டும், என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டார். ஆனால் இருவருடன் இருந்ததோ வறுமை மட்டும்தான்.

அப்போது இடைவிடா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட இவர் மைதானத்தில் அங்குள்ள முகாமில் தங்கியிருந்தார். மழைக்காலத்த்தில் வெள்ளத்தின் அடைக்கலமாக முகாம்களும் மாறும் எனவும், கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடமாகவும் இருக்கும் என கூறுகிறார் ஜெய்ஸ்வால். பின்னர் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட இவர், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அங்கு தன்னுடன் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் பலரும் பானி பூரி சாப்பிட வரும் போது வறுமையின் கொடுமையை உணர்ந்ததாக கூறுகிறார்.

ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது, இவரின் பயிற்சியாளரும், காப்பாளருமான ஜ்வாலா சிங் என்பவர், கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு அனைத்து செலவுகளையும் ஏற்று அவரது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இந்நிலையில், விடாமுயற்சியும் அயராத உழைப்பும், மேற்கொண்ட ஜெய்ஸ்வால் விஜய் ஹசாரே தொடரில் விளையாட மும்பை அணியில் இடம் பிடித்தார். பின்னர்  ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி மிரளவைத்தார்.

இதன்மூலம் முதல்தர போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் U19 உலககோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல்-2020க்கான ஏலத்தில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ரூ.2 கோடியே 40 லட்சதுக்கு ஏலமெடுத்தது. பிறந்ததிலிருந்து வறுமை மட்டுமே அறிந்திருந்த இவர், தற்போது அவரது கையில் கோடிகளில் ஆரம்பித்துள்ளது. மேலும், ஐபிஎல் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டபோது, தனக்கு வாழ்க்கை அளித்த பயிற்சியாளருக்கு ஒட்டு மொத்த பணத்தையும் தரப் போவதாக தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

3 minutes ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

20 minutes ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

55 minutes ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

57 minutes ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

1 hour ago

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

2 hours ago