kl rahul about ind vs sa [file image]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தனர்.
இந்த இரண்டாவது போட்டி மிகவும் குறைவான நேரத்திலே நடந்து முடிந்தது. குறிப்பாக சொல்ல போனால் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டு முடிந்த டெஸ்ட் போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய கே.எல்.ராகுல் “போட்டியில் விளையாடும் போது டாஸ் போடப்பட்டதற்குள் போட்டியே முடிந்துவிட்டது போல இருக்கிறது என” கூறியுள்ளார்.
IndVsSA: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் “கேப்டவுனில் நாங்கள் முதல்முறையாக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம். போட்டியில் வெற்றிபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இங்கு பலமுறை விளையாடி இருக்கிறோம். ஒவ்வொரு முறையிலும் பேட்டிங் சரியில்லாத காரணத்தால் சில போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறோம்.
கேப்டவுனை யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உணர்ச்சிகளின் அடிப்படையில், நேர்மையாக, யாராலும் புரிந்து கொள்ள முடியாது. டாஸ் இப்போதுதான் நடந்தது அதற்குள் போட்டியே முடிந்துவிட்டது போல தெரிகிறது. ஆனால், இந்த முறை வெற்றிபெற்றுள்ளது நாங்கள் மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம் நாட்டிற்காக விளையாடுவதை நாங்கள் ரொம்பவே எவ்வளவு மதிக்கிறோம். எனவே, இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் எங்களுக்கு ரொம்பவே முக்கியம் அதனை நினைத்து தான் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகிறோம்” எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…