டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய சக்கரங்களுடன் கூடிய காரை பரிசளித்ததற்காக நன்றி ஆனந்த்மஹிந்திரா,மிக விரைவில் காரை வெளியே எடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”,என்று குறிப்பிட்டுள்ளார். காரில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஈட்டி எறிந்த தூரமான 87.58 மீ பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக,2020 கோடைகால பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான சுமித் ஆண்டிலுக்கு முதல் XUV700 காரை மஹிந்திரா சமீபத்தில் பரிசளித்தது.
புதிய XUV700 ஈட்டி எறிதல் பதிப்பு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது மற்றும் சிறப்பு வண்ணப்பூச்சுகளை கொண்டுள்ளது. காரின் முன்பக்க செங்குத்து கிரில் ஸ்லேட்டுகள், பின்புற டீக்கால்கள் மற்றும் மஹிந்திரா பிராண்ட் லோகோ ஆகியவை தங்க நிறத்தில் உள்ளன. உட்புறத்தில், காரில் கோல்டன் ட்ரீட்மென்ட் உள்ளது.எனினும்,வாகனத்தின் மீதமுள்ள இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மாறாமல் உள்ளன.
இதற்கிடையில்,மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் XUV700 SUV அறிமுகமானதில் இருந்து ஏற்கனவே 65,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு SUV இன் டெலிவரிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன, மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் குறைந்தது 14,000 XUV700களை டெலிவரி செய்ய வாகன உற்பத்தியாளர் இலக்கு வைத்துள்ளார். எஸ்யூவியின் விலை ரூ.12.49 லட்சம் முதல் ரூ.22 .89 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…