தென்னாபிரிக்கா , இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்க இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 395 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியது.நேற்றைய நான்காம் நாள் ஆட்டமுடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்து உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தால். முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்வார். இதுவரை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை பறித்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதரன் உடன் பகிர்ந்து கொள்வார்.
முரளிதரன் இந்த சாதனையை 66 டெஸ்ட் போட்டிகளில் படைத்தார். அஸ்வின் தற்போது 66 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…