பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் தொடருக்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்களாக சர்வதேச போட்டிகள் பாதித்ததை அடுத்து இன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் போட்டியிட இருந்தார்.
இந்நிலையில், பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் இப்போது ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் இன்று முதல் 17 வரை நடைபெறும். இதன் பின்னர், டொயோட்டா தாய்லாந்து ஓபன் ஜனவரி 19 முதல் 24 வரை மற்றும் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகள் ஜனவரி 27 முதல் 31 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காக் புறப்படும் முன் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து பாங்காக் வந்தனர். சாய்னா நேவால் ஏற்கெனவே கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…