இந்தோனேசியா:இன்று நடைபெற உள்ள பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals) இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை பரபரப்பான ஆட்டத்தில் 21-15 15-21 21-19 என்ற கணக்கில் சிந்து தோற்கடித்தார். அதன்படி,இப்போட்டியை கடுமையாகப் போராடி வென்றதன் மூலம் பி.வி.சிந்து,உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.
இந்நிலையில்,இந்தோனேசியாவின் பாலியில் இன்று நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் டூர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,உலக நம்பர் 6 மற்றும் தென்கொரிய வீராங்கனையான ஆன் சியோங்கை எதிர்த்து விளையாடவுள்ளார். இப்போட்டியில்,சிந்து சியோங்கை வீழ்த்தி பட்டம் வெல்வாரா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முன்னதாக,பி.வி. சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார் .BWF வேர்ல்ட் டூர் பைனலுக்கு வருவதற்கு முன், அவர் தனது கடைசி மூன்று நிகழ்வுகளான பிரெஞ்ச் ஓபன், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் மற்றும் இந்தோனேசியா ஓபன் ஆகியவற்றில் அரையிறுதியை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…