துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் அமீர் கானின் வாட்ச் – பதைபதைக்கு வீடியோ காட்சி உள்ளே…!

Default Image

லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது மனைவியுடன் சாலையை கடந்து கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக அவள் எனக்கு சில அடிகள் தள்ளி இருந்தாள். அப்போது திடீரென இரண்டு பேர் என்னிடம் ஓடி வந்து எனது முகத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, எனது வாட்சை பறித்து சென்றார்கள். நல்லவேளை நானும் எனது மனைவியும் பாதுகாப்பாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அமீர்கானின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் நடந்த போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பதிந்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh
US Vice President JD Vance