இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்10 அணிகள் விளையாடி வருகிறது. போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் சென்னை அணி சென்னை எஃப்சி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணியும் , ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதியது.
முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை.பின்னர் கூடுதல் நேரத்தில் சென்னை அணி வீரர் ஆண்ட்ரி ஸ்சிம்ப்ரி முதல் கோல் அடித்தார்.
இதை தொடர்ந்து பதிலுக்கு ஹைதராபாத் வீரர் மேத்யூ கில்காலோன் பதில் கோல் அடிக்க ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் சென்னை வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் திகில் கோல் அடித்து சென்னை அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…