இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது .இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நேற்று முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்களுடன் முன்னிலையில் இருந்தனர்.களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை செஸ் ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் ஆகிய இருவரும் மணியை அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் மணியை அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 59 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 220 ரன்கள் அடித்து 114 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.களத்தில் கோலி 83 , ரஹானே 45 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…