Lionel Messi [Image source : file image ]
அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி லாரியஸ் உலக விளையாட்டு விருதை வென்றுள்ளார்.
ஆண்டு தோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் அணிகள் ஆகியவற்றை தேர்வு செய்து Laureus World Sports விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
பாரிஸில் நடந்த இந்த விருது விழாவில் கலந்துகொண்டு அவர் விருதினை பெற்றுக்கொண்டார். இந்த லாரியஸ் விருதை மெஸ்ஸி வாங்குவது முதல் முறையில்லை 2-வது முறையாக வென்றுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விருது பெற்றதை தொடர்ந்து பேசிய மெஸ்ஸி ” விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நேரத்தில் நான் என்னுடைய அனைத்து அணி வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஒருவனமாக மட்டும் சாதிக்கவில்லை. லாரியஸ் விருதை என்னுடைய கைகளில் வைத்திருப்பது மிகவும் மதிக்க தக்க ஒன்று. வழியில் பல தடைகள் இருந்தன, ஆனால் நான் எப்போதும் என் மக்களின் ஆதரவுடன் என்னை மேம்படுத்த முயற்சித்தேன்.
நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது கனவையும் ஒரு முழு நாட்டின் கனவையும் என்னால் நிறைவேற்ற முடிந்தது. இந்த விருது அர்ஜென்டினா அணிக்கு அர்ப்பணிக்கிறேன் மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார் மேலும், சிறந்த அணிக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…