ஐபிஎல் டி20 தொடரின் 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, பிருத்வி ஷா 5 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய ஹெட்மியர், சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷாப் பண்ட் இவர்களின் கூட்டணியின் மூலம் டெல்லி அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. சிறப்பாக இருவரும் விளையாடி வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிஷாப் பண்ட் 31 ரன்னுடன் வெளியேறினார்.
டெல்லி அணி தடுமாறி விளையாடி வந்த நிலையில் மத்தியில் இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விலையாடி 53 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தனர். 158 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…