KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

Published by
அகில் R

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் ராணா வரை களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால் 51-4 என இக்கட்டான நிலையில் நடராஜன் பந்து வீச்சுக்கு கொல்கத்தா அணி  திணறி வந்தது.

அதன் பிறகு களமிறங்கிய ரமன்தீப் சிங், பிலிப் சால்ட்டுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் கொல்கத்தா அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பித்ததோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது. பொறுமையாக விளையாடி ரன் சேர்த்த பிலிப் சால்ட் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி காட்ட தொடங்கினார். அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் அதிரடி காட்ட கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 65* ரன்கள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் நடராஜன் 3 விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதை தொடர்ந்து 209 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ஹைதராபாத் அணி.

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

28 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

56 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

3 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago