Afghanistan player Usman Ghani has taken a break from cricket [Image tweeted by @ACBofficials]
ஊழல் புகாரை முன்வைத்து கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆப்கானிஸ்தான் அணி வீரர் உஸ்மான் கனி.
இந்தியாவில் நடைபெற உள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் ஆப்கானிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நாளை முதல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையில், தொடருக்கு முன்னதாக, அணியின் வீரர் ஒருவர் கிரிக்கெட்டிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
வங்கதேசம் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்படாத தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கனி, சமூக வலைத்தளத்தில் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடைபெற்று வருவதாக பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக உஸ்மான் கனி அறிவித்துள்ளார்.
உஸ்மான் கனி ட்விட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள ஊழல் தலைமை என்னை பின்வாங்க வைத்துள்ளது. நான் எனது கடின உழைப்பைத் தொடர்வேன், சரியான நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்படும் என ஆவலுடன் காத்திருப்பேன். அது நடந்தவுடன், நான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவேன். அதுவரை என் தேசத்துக்கு ஆதரவு அளிப்பேன்.
மேலும், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படாததற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார். அனைத்து வடிவங்களில் இருந்தும் என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு இந்த நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை, கிரிக்கெட் வாரியம் நல்லவர்கள் கைக்கு செல்லும் வரை அணிக்கு திரும்பமாட்டேன். நான் நீக்கப்பட்டதற்கு தலைமை தேர்வாளரிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துளேன் என்றுள்ளார்.
26 வயதான உஸ்மான் கனி வங்காளதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்மான் கனி ஆப்கானிஸ்தானுக்கு 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் முறையே 435 மற்றும் 786 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 20 முதல் தர போட்டிகளில் விளையாடி 39.35 சராசரியில் 1456 ரன்களை எடுத்துள்ளார். அவர் இதற்கு முன்பு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார், ஆனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…