கடும் தகராறு..! விராட், கம்பீருக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் விதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நேற்றை போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீரும் வாய் தகராறில் ஈடுபட்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிப்பு.

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் நேற்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

இதன்பின் சுலபமான என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கேப்டன் கேஎல் ராகுலுக்கு காயம் காரணமாக கடைசி பேட்டராக வந்தாலும், இலக்கை எட்ட முடியவில்லை. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. இதனிடையே, இப்போட்டியில் பெங்களூரு அணி சுலபமாக வெற்றி பெற்றாலும், களத்தில் விராட் கோலியின் கடும் ஆக்ரோஷம் நிறைந்து இருந்தது.

இதனால் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் போட்டி முடிவில் விராட் கோலியும், கௌதம் கம்பீரும் மோதி கொண்ட சம்பவம் தான். இது வீரர்களுக்கு இடையே பெரும் வாய் தராகரில் முடிந்தது. அதாவது, லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது விராட் கோலி ஆடுகளத்தில் ஷூ காலால் விதிகளுக்கு மீறி நடந்ததாக லக்னோ வீரர் நவீன் உல் ஹக் நடுவரிடம் குற்றம் சாட்டினார்.

விராட் கோலி தாம் விதிகளுக்கு மீறி ஆடுகளத்தில் நடக்கவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாம் ஸ்பைக் ஷூ அணியவில்லை என்றும் காலை தூக்கி காட்டி உள்ளார். இது நவீன் உல் ஹக்கை அவமானப்படுத்தும் விதமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல், ஆடுகளத்தில் விராட் கோலி ரொம்ப ஆக்ரோஷமாக செயல்பட்டார். இதுவே எதிர் அணிக்கு கோபத்தை வரவழைத்திருக்கலாம்.

போட்டி முடிந்தவுடன், கேல் மேயர்ஸ் விராட் கோலி உடன் பேசிக் கொண்டிருந்தபோது கம்பீர் அவரை பிரச்சனை பெருசாக கூடாது என்று அழைத்துச் சென்றார். அப்போது, கோலியும், கம்பிரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீரர்கள், இருவரையும் சூழ்ந்து கொண்டு மோதலை தடுக்க முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கை மீறி சென்று விடும் என்பதற்காக அமித் மிஸ்ராவும் உள்ளிட்டோர் விராட் கோலியை தள்ளி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மற்றும் எல்எஸ்ஜி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரின் மோதல் சின்னபிள்ளைத்தனமாக காணப்பட்டது. விராட், கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரின் தகராறால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில், ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு சண்டைக்குப் பிறகு, அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 100% (சுமார் ரூ.1 கோடி மற்றும் ரூ.25 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, எல்எஸ்ஜி வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கும் போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதித்தது ஐபிஎஸ் நிர்வாகம்.

 

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

1 hour ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

2 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

2 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

3 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

3 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

4 hours ago