கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ..! வங்கதேசத்தை வீழ்த்தி அமெரிக்கா அணி வெற்றி !!

Published by
அகில் R

சென்னை : டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது வங்கதேச அணி அமெரிக்கா அணியுடனான மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்களாதேச அணி ஒரு சீரான தொடகத்தயே வெளிப்படுத்தியது.

வங்கதேச அணியில் டவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் தனி ஆளாக நின்று மெதுவாக ரன்களை உயர்த்தினார். இவர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் மொத்தம் 47 பந்துக்கு 58 ரன்கள் எடுத்திருந்தார். இவருக்கு அடுத்த படியாக மஹ்முதுல்லா 22 பந்துக்கு 31 ரன்கள் எடுத்திருந்தார்.இறுதியில், வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தனர். அமெரிக்கா அணியில் ஸ்டீவன் டெய்லர் மிகச்சிறப்பாக பந்து வீசி 3 ஓவருக்கு 9 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

அதனை தொடர்ந்து இலக்கை அடைய பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்கா அணி ஒரு வலுவான தொடக்கம் அமையாமல் திணறினார்கள். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் 6-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்த கோரி அண்டர்சனும், ஹர்மீட் சிங்கும் சிறப்பாக விளையாடி வங்கதேச பந்து வீச்சை சமாளித்து அமெரிக்கா அணியை 19.3 ஓவரில் கரை சேர்த்தனர்.

இதனால் அமெரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோரி அண்டர்சன் 25 பந்துகளில் 34 ரன்களும், ஹர்மீட் சிங் 13 பந்துக்கு 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வங்கதேச அணியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 போட்டியானது நாளை (மே-24) இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

Published by
அகில் R

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

6 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

7 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

10 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

10 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

11 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

11 hours ago