மூன்று தோல்விகளுக்குப் பிறகு ஒரு சுற்றுலா ..! அப்படி மும்பை அணி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல்லில் மும்பை அணி வீரர்கள் 3 தோல்விக்கு பிறகு சுற்றுலா சென்று வந்ததை மும்பை அணி X தளத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை முதல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் நிர்வாகம் மும்பை வீரர்களுக்கு தொடர் தோல்வியின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஜாம்நகரருக்கு சுற்றுலா செல்லவைத்துள்ளனர்.

அந்த வீடியோவையும் மும்பை அணி நிர்வாகம் தங்களது X தளத்திலும் பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோவில் ரோஹித் ஷர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் கட்டி அனைத்து ஒன்றாக மகிழ்ச்சியாக சுற்றுலாவை களிக்கும் வகையில் இருக்கிறது. இதை கண்ட சில உண்மையான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் போட்டியை வெற்றி பெறாமல் எதற்கு இப்படி சுற்றுலா ? என்று கேலி செய்தும் வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு பிறகு அடுத்த  6 நாட்கள் போட்டிகள் இல்லாமல் இருப்பதால். இந்த ஆறு நாள் இடைவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜாம்நகரில் சுற்றுலா சென்றதாக தகவல் வெளியாகி வந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் இன்று அவர்கள் சுற்றுலா சென்ற வீடியோவை சமூகத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியானான வலுவான மும்பை அணிக்கு இந்த ஆண்டு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால், இது மும்பை அணிக்கு புதிதான விஷயம் இல்லை, இதற்கு முன் ஒரு ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இது போல முதலில் 5 போட்டிகளில் தோல்வியை பெற்று அதன் பிறகு அந்த தொடரில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

13 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

15 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

16 hours ago