ரிஷப் பண்ட் தயவுசெஞ்சு இதை மட்டும் பண்ணுங்க! கெஞ்சி கோரிக்கை வைத்த ஆகாஷ் சோப்ரா!

Published by
பால முருகன்

Rishabh Pant : ரிஷப் பண்ட்  முடிந்த அளவிற்கு விரைவாக வருகை தந்து விளையாடவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அட்டகாசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி மொத்தமாக 371 ரன்கள் குவித்து இருக்கிறார். கார் விபத்தில் சிக்கி இருந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்பிய நிலையில், இந்த சீசன் அவருக்கு நல்ல சீசனாக அமைந்து இருக்கிறது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என விளாசி வரும் ரிஷப் பண்ட்  முடிந்த அளவிற்கு சீக்கிரமாக களத்திற்கு வந்து விளையாடவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரிஷப் பண்ட் ரொம்பவே பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர். அவருடைய பேட்டிங் வர வர என்னை வெகுவாக கவர்கிறது.

மும்பை அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ரிஷப் பண்ட்  அவுட் ஆனது எனக்கு ரொம்பவே வேதனையை கொடுத்தது. அந்த போட்டியில் அவர் நம்பர் 5-வது இடத்தில் இறங்கி விளையாடினார். அந்த இடத்தில் அவர் இறங்கியது சரியானதாக இல்லை. எனவே, இனிமேல் அவர் அந்த இடத்தில் இறங்கவே கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

அந்த போட்டியில் ஒரு ரிஷப் பண்ட் சீக்கிரமாக இறங்கினால் இன்னுமே அவர் நிறைய ரன்கள் அடித்து இருப்பாரோ என்று எனக்கு தோணுகிறது. என்னை பொறுத்தவரை முடிந்த அளவுக்கு ரிஷப் பண்ட்  விரைவாகவே களத்திற்கு வருகை தந்து பேட்டிங் செய்யவேண்டும். தாமதமாக வரக்கூடாது என்னுடைய ஆசையும் கோரிக்கையும் அது தான். வருகின்ற போட்டிகளில் தயவுசெய்து ரிஷப் பண்ட்  இதனை செய்யவேண்டும்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

38 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

2 hours ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago