ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். இதில் ஏபி டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடுத்தவுடன் பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ்ஸை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது ” முதலில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து விக்கெட்களை இழந்தோம் அடுத்ததாக ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடிதன் மூலம் அணிக்கு நல்ல ரன் கிடைத்தது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை இருந்தாலும் அவர் இப்போது சிறப்பாக விளையாடுகிறார். இனி அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடமாட்டார் என்று நினைக்கவில்லை. ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…