அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Published by
அகில் R

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் நேற்றைய முதல் போட்டியில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கில்லும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடி காட்ட தொடங்கினர். ஆனால், துரதிஷ்டவசமாக கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ், அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து விளையாட்டினார். அந்த அதிரடியானஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் எப்படி அதிரடி காட்டினாரோ அதே அதிரடியில் விளையாடினார். அதனால், வெறும் 47 பந்தில் 100 ரன்கள் விளாசினார், இதனால் சர்வதேச போட்டியில் அறிமுகமான 2-வந்து போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அவருடன் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி 77 ரன்கள் சேர்த்தார்.  அதை தொடர்ந்து அபிஷேக் சர்மா 100 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில், ரிங்கு சிங்கின் ஒரு அதிரடி கேமியோவால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் பெரும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 என்ற இமாலய ரன்னை எடுத்தது.

அதை தொடர்ந்து இமாலய இலக்கான 235 ரன்கள் எடுக்க பேட்டிங் களம் இறங்கியது ஜிம்பாப்வே அணி. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜிம்பாப்வே அணியின் வீரர்களான வெஸ்லி மாதேவெரேவும், லூக் ஜாங்வேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதில், வெஸ்லி 43 ரன்களும், வெஸ்லி 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர், ஆனாலும் அது ஜிம்பாப்வே அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால், ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது, மேலும் நேற்று கண்ட படுதோல்விக்கு திருப்பி கொடுத்து விட்டதை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

12 seconds ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

27 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

29 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago