4 ஆண்டுகளுக்கு பிறகு..! கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரில் சதம் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணிக்கு எதிராக 62 பந்துகளில் சதம் விளாசினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் தனது ஆறாவது சதத்தை அடித்தார்.

T20, டெஸ்ட் மற்றும் ODI ஆகியவற்றில் அற்புதமான சதங்களை அடித்து, மீண்டும் வந்த பிறகு, விராட் ஹைதராபாத்தின் சொந்த மைதானத்தில் ஐபிஎல்லில் தனது 4 வருட சத வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல்லில் விராட் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். ஐபிஎல்லில் தனது 6வது சதத்துடன், போட்டி வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கால் 500 ரன்களை கடந்தார். மேலும், இந்த சீசனில் தனது நான்காவது சத பார்ட்னர்ஷிப்பை ஃபாஃப் டு பிளெசிஸுடன் பகிர்ந்து கொண்டார். இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 6 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 538 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் நான்கு சதங்களை அடித்திருந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள்:

விராட் கோலி – 6, கிறிஸ் கெய்ல் – 6, ஜோஸ் பட்லர் – 5, கேஎல் ராகுல் – 4, டேவிட் வார்னர் – 4, ஷேன் வாட்சன் – 4 என ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்துள்ளனர். இந்த சீசனின் ஆரஞ்சு கேப் பட்டியலில் ஃபாஃப் டு பிளெசிஸ், ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்குப் பிறகு விராட் நான்காவது இடத்தில் உள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago