Virat Kohli equaled Chris Gayle's record! [Image Source : AFP Photo]
ஐபிஎல் தொடரில் சதம் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணிக்கு எதிராக 62 பந்துகளில் சதம் விளாசினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் தனது ஆறாவது சதத்தை அடித்தார்.
T20, டெஸ்ட் மற்றும் ODI ஆகியவற்றில் அற்புதமான சதங்களை அடித்து, மீண்டும் வந்த பிறகு, விராட் ஹைதராபாத்தின் சொந்த மைதானத்தில் ஐபிஎல்லில் தனது 4 வருட சத வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல்லில் விராட் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். ஐபிஎல்லில் தனது 6வது சதத்துடன், போட்டி வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கால் 500 ரன்களை கடந்தார். மேலும், இந்த சீசனில் தனது நான்காவது சத பார்ட்னர்ஷிப்பை ஃபாஃப் டு பிளெசிஸுடன் பகிர்ந்து கொண்டார். இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 6 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 538 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் நான்கு சதங்களை அடித்திருந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள்:
விராட் கோலி – 6, கிறிஸ் கெய்ல் – 6, ஜோஸ் பட்லர் – 5, கேஎல் ராகுல் – 4, டேவிட் வார்னர் – 4, ஷேன் வாட்சன் – 4 என ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்துள்ளனர். இந்த சீசனின் ஆரஞ்சு கேப் பட்டியலில் ஃபாஃப் டு பிளெசிஸ், ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்குப் பிறகு விராட் நான்காவது இடத்தில் உள்ளார்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…