கிரிக்கெட்

சச்சின், ரோஹித் பிறகு உலகக்கோப்பையில் சாதனை படைத்த டேவிட் வார்னர்..!

Published by
murugan

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தபோது ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்ரம் வார்னரை போல்ட் செய்தார்.

முதல் ஆஸ்திரேலிய வீரர்:

வார்னர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 528 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக 500 ரன்னிற்கு மேல் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

2019 உலகக்கோப்பையில் வார்னர் முதல் முறையாக 500 ரன்னிற்கு மேல் அடித்தார். வார்னரைத் தவிர ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் (2007), மேத்யூ ஹெய்டன் (2007) மற்றும் ஆரோன் பின்ச் (2019) ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்காக ஒரே உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு மேல் எடுத்த வீரர்கள்:

இந்த சாதனை மூலம் இவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார். இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு  எடுத்த மூன்றாவது வீரர் வார்னர் ஆவார். முன்னதாக, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003  உலகக்கோப்பைகளிலும், இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…

14 minutes ago

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

27 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

13 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

14 hours ago