உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூன் 29-ம் தேதி நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. அப்போட்டியின் போது மைதானத்தின் மேலே “பாகிஸ்தானுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் விமானம் ஓன்று பறந்து சென்றது.
இந்த செயலுக்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் மீண்டும் லீட்ஸில் நடைபெற்ற போட்டியின் போது இந்தியா -இலங்கை அணிகள் மோதிய போது அப்போது மைதானத்தின் மேலே “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் பேனர் ஒன்றை விமானம் சுமந்து சென்றது.இதற்கும் ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.
இதை பற்றி ஐசிசி கூறுகையில் ,இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.உலக்கோப்பை போட்டியின் போது இது போன்ற அரசியல் கோஷங்களை நாங்கள் ஆதரிப்பது இல்லை.இது தொடர்பாக போலீஸ் உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என ஐசிசி அறிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா -நியூஸிலாந்து அணி மோத உள்ளது.அதனால் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் மேல இன்று விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…