[Image Source : BCCI/Getty Images]
2022-23 சீசனுக்கான இந்திய மகளிர்களுக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2022-23 சீசனுக்கான இந்திய சீனியர் மகளிர் அணிக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது. இதில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேடு ஏ பிரிவில் (ரூ.50 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று, ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் கிரேடு பி பிரிவில் (ரூ.30 லட்சம்) உள்ளனர். மேக்னா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேகனா, அஞ்சலி சர்வாணி, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், மற்றும் யஸ்டீன் தியோல், பாட்டியாவை கிரேடு ‘சி’ பிரிவில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டில், 2022 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஒப்பந்தம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்கூர், ஒரு நட்சத்திர சீசனுக்குப் பிறகு நேராக பி பிரிவுக்குள் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…