பஞ்சாப் அணியில் 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடிக்கு அவரை அணி தக்க வைத்துக் கொண்டது. அவர் 2018 முதல் இந்த அணியின் ஒரு அங்கமாக உள்ளார். கடந்த சீசனில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்தபோது, சில போட்டிகளில் அவர் இல்லாத நேரத்தில் மயங்க் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.
பஞ்சாப் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான மயங்க் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2,135 ரன்கள் எடுத்துள்ளார். 95 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார். மயங்கிற்கு முன், கே.எல். ராகுல் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக இருந்தார். மெகா ஏலத்திற்கு முன், ராகுல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு, லக்னோ அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே கே.எல். ராகுலை வாங்கியது.
ஐபிஎல் 2022 மார்ச் 26 முதல் தொடங்கி இறுதிப் போட்டி மே 29 அன்று நடைபெறவுள்ளது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…