டி20 உலகக்கோப்பையில் அர்ஷதீப் சிங் புதிய சாதனை! போட்டி முடிந்த பின் கூறியது என்ன?

Published by
அகில் R

அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி வெளியேறினார்கள். அவர் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

மேலும், 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 9 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையில் சிறப்பான பந்து வீச்சை வீசிய பட்டியலில் அஸ்வினை தாண்டி முதலிடத்தில் தனது பெயரை பதிவு செய்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அர்ஷதீப் சிங்  இந்த போட்டியில் விளையாடியதை குறித்து பேசி இருந்தார்.

அவர் கூறுகையில், “இந்த போட்டியில் எனது பந்து வீச்சை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், கடந்த 2 போட்டிகளில், நான் பந்து வீச்சில் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுத்தேன். அதனால் நான் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமலே இருந்தேன். ஆனால், என் அணி நிர்வாகமும், என் அணி கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த போட்டிக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த நியூயார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது.அதனை பயன்படுத்தி நன்றாக பந்து வீசினேன். எங்களின் திட்டமும் சாதாரணமாக வைத்திருந்தோம். பிட்சில் சரியான இடத்தில் பந்தை வீசினாலே போதும், மற்ற அனைத்தையும் பிட்ச் செய்துவிடும் என்று திட்டமிட்டோம்.

அதனால் நல்ல பந்தை வீச வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இதுபோன்ற பிட்ச்களில் தான், அங்கு நிலவும் சூழலையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்”, என்று கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

42 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago