4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ரன்கள்..!

Published by
murugan

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இறங்கிய  இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.

இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை  ஆஸ்திரேலிய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 407 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும் , சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடி வந்தனர். நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 31 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் ரோஹித் அரைசதம் விளாசி 52 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக 4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளனர். இதனால், இந்திய அணிக்கு நாளை கடைசிநாள் ஆட்டத்தில் 309 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும். தற்போது களத்தில் புஜாரா 9* மற்றும் ரஹானே 4* ரன்களுடன் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

1 hour ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago